தேவிபாகவதம் 11 – ஆவது ஸ்கந்தம் 16, 17, 19 – வது அத்யாயங்களில், ஸந்தியாவந்தன முறையைப்பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அவைகளிலிருந்து சில சுலோகங்கள் அர்த்தத்துடன் இங்கு கூறப்படுகின்றன
ஸந்தியாவந்தன காலம்
காலை ஸந்தியாவந்தன காலம்
உத்தமா தாரகோபேதா மத்யமா லுப்ததாரகா |
அதமா ஸூர்யஸஹிதா ப்ராதஸ்ஸந்த்யா த்ரிதாமதா ||
- நக்ஷத்ரங்கள் காணப்படும்போது ஸந்தியாவந்தனம் செய்வது உத்தமம்.
- நக்ஷத்ரங்கள் மறைந்தபின், சூரியோதயத்துக்குமுன் செய்வது மத்யமம்.
- சூரியன் உதயமாகியபின் செய்வது அதமம்.
மாத்யாஹ்நிக காலம்
மத்யாஹ்நே மத்யபாஸ்கராம் |
சூரியன் ஆகாசமத்தியில் தலைக்கு நேராக இருக்கும்போது மாத்யாஹ்நிகம் செய்யவேண்டும்.
மாலை ஸந்தியாவந்தன காலம்
உத்தமா ஸூர்யஸஹிதா, மத்யமாஸ்தமிதேரவெள |
அதமா தாரகோபேதா ஸாயம்ஸந்தியா த்ரிதா மதா ||
- சூரியன் அஸ்தமிப்பதற்குமுன் செய்வது உத்தமம்.
- சூரியன் அஸ்தமித்தவுடன் செய்வது மத்யமம்.
- நக்ஷத்ரங்கள் காணப்பட்டபின் செய்வது அதமம்,
இவ்வாறு ஸாயம் ஸந்தியாவந்தனத்திற்கு மூன்று காலங்கள்.
இவைகளையே நம் பூர்வாச்சாரியர்கள் காணாமல், கோணாமல், கண்டு கொடு என்று சொல்லியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment